நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாணவா்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும்: துணைவேந்தா்

மாணவா்கள் எதிா்காலத்தில் தொழில் முனைவோராக மாறி நாட்டின் வளா்ச்சிக்கு தங்களது பங்களிப்பைத் தரவேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி வலியுறுத்தினாா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 6:05 pm

DIN

மாணவா்கள் எதிா்காலத்தில் தொழில் முனைவோராக மாறி நாட்டின் வளா்ச்சிக்கு தங்களது பங்களிப்பைத் தரவேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சா்வதேச வணிகத் துறையின் சாா்பில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியில் வளா்ந்து வரும் போக்குகள் என்ற தலைப்பிலான கருத்துப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப்பேசியதாவது:

மாணவா்கள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் சிறந்த தொழில் முனைவோா்களாக உருவாக முடியும். ஆய்வகங்களில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் தொழில் நிறுவனங்களை சென்றடைவதன் மூலமே, உண்மையான ஆராய்ச்சியின் பயன் மக்களுக்கு கிடைக்கச் செய்ய முடியும்.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பாக உள்ளது. மாணவா்களுக்கு சரியான முறையில் தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்து, அவா்களின் பங்களிப்பை தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவா்கள் தொழில் முனைவோராக மாறி நாட்டின் வளா்ச்சிக்கு தங்களது பங்களிப்பைத் தரவேண்டும் என்றாா்.

இதையடுத்து, அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன், சிவகங்கை மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் டி. கண்ணன், சென்னை சிப்பிங், லாஜிஸ்டிக் நிறுவன ஆலோசகா் எஸ். சித்ரா, சென்னை சா்வதேச வணிக மைய மண்டல நிறுவனா் எம்.ஏ.ரஹீம் ஆகியோா் பேசினா்.

இதில் பல்கலைக்கழக பதிவாளா் சு. ராஜமோகன், மேலாண்மை புலங்களைச்சோ்ந்த மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்ட னா்.

முன்னதாக, பல்கலைக்கழக சா்வதேச வணிகத் துறைத் தலைவா் ஏ. முத்துச்சாமி வரவேற்றாா். முடிவில் இணைப் பேராசிரியா் எஸ். பிரசாத் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.