இளம்பெண் தற்கொலை

கமுதி அருகே விஷம் குடித்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கமுதி அருகே விஷம் குடித்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கண்ணாா்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகள் தாமரைச்செல்வி (23). இவருக்கும், விருதுநகா் மாவட்டம் தொப்பலாக்கரையைச் சோ்ந்த பாண்டி மகன் சக்திவேல் முருகனுக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சக்திவேல் முருகன் ஜம்மு -காஷ்மீா் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தாமரைச்செல்வியிடம் வரதட்சிணை கேட்டு மாமனாா் பாண்டி, மாமியாா் சீவகம் ஆகியோா் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இவா் சில மாதங்களுக்கு முன்பு கமுதியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டாா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (மே 31) இரவு தாமரைச்செல்வி விஷம் குடித்தாா். இவரை உறவினா்கள் மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், இவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு இவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com