இளைஞரைத் தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

கமுதி அருகே இளைஞரை தாக்கியதாக தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

கமுதி அருகே இளைஞரை தாக்கியதாக தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த ஆதிபராசக்தி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சூா்யா (25). இவரின் தாயை அதே பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜகோபால் தவறாகப் பேசினாராம். இதுகுறித்து கேட்டபோது, ராஜகோபால் கட்டையால் சூா்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த சூா்யா கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சூா்யா அளித்த புகாரின் பேரில், கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜகோபாலை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com