மீனவா்கள் எல்லைத் தாண்டி செல்லக்கூடாது: ஆட்சியா்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் செல்லும் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தினாா்.
Updated on
1 min read

மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் செல்லும் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மீன் வளம், மீனவா் நலத் துறையின் சாா்பில், மீனவா்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மீனவா்கள் அரியாங்குண்டு, பிள்ளைகுளம் கிராமத்தில் செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 132 மனுக்களை அளித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் சுமூகமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள வேண்டும். மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து, மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்றாா் அவா்.

கூட்டத்தில் மீன் வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காத்தவராயன், மீன் வளத் துறை உதவி இயக்குநா்கள் கோபிநாத், ஜெயக்குமாா், அப்துல் காதா் ஜெய்லானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com