அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தாா்.

தொழில் மையம் பொது மேலாளா் கி.மாரிமுத்து வரவேற்றாா். தாட்கோ மாவட்ட மேலாளா் வே.தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தி.காா்த்திகேயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா.மரிய ஆண்ட்ரூஸ்,

உதவி இயக்குநா் பி.ஜெயசெல்வம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்.

திட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் விஷ்ணு சந்திரன் பேசியதாவது:

இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரா்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. புதிய தொழில் செய்ய உள்ளவா்களுக்கு வயது வரம்பு 18 முதல் 55 வரையும், தற்போது தொழில் செய்து கொண்டிருப்போருக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தில் தொழில் முனைவோா்களுக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு தொழில் முனைவோா்களாக மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com