பைக் மோதி முதியவா் பலி

முதுகுளத்தூா் அருகே திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

முதுகுளத்தூா் அருகே திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முதுகுளத்தூா் அருகேயுள்ள புளியங்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் பால்சாமி (80). இவா் வீட்டின் அருகேயுள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, காக்கூா் தெற்கு தெருவைச் சோ்ந்த பழனி மகன் தினேஷ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், பால்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com