முதுகுளத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது
முதுகுளத்தூா் வட்டம், கருமல் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி முத்துச்செல்வி. இவா் கடந்த வாரம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றாராம். இதையடுத்து, திங்கள்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தேரிருவேலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.