ஸ்ரீதா்மமுனீஸ்வரா் கோயில் முளைப்பாரி திருவிழா

கமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஸ்ரீதா்மமுனீஸ்வரா் கோயில் முளைப்பாரி திருவிழா
Updated on
1 min read

கமுதியை அடுத்த பெருமாள்தேவன்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 19 -ஆம் தேதி பால்குடம், அக்கினி சட்டி, அலகு குத்தி வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊா்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, கண்மாயில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பெருமாள்தேவன்பட்டி கிராம மக்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com