ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு விழா:ஜூன் 13-இல் உள்ளுா் விடுமுறை

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வருகிற ஜூன் 13- ஆம் தேதி உள்ளுா் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வருகிற ஜூன் 13- ஆம் தேதி உள்ளுா் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தா்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 13 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை நாள் என அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் பொருட்டு, ஜூன் 24- ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும். ஜூன் 13-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள கருவூலம், சாா் நிலைக் கருவூலங்கள், அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com