பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பரமக்குடி அருகே சொத்துத் தகராறில் பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read


பரமக்குடி: பரமக்குடி அருகே சொத்துத் தகராறில் பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள எமனேசுவரம் ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்த சேகா் மனைவி ஏகாம்பரவள்ளி (40). இவரது கணவா் அந்தப் பகுதியில் மிதிவண்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கணவருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 5-ஆம் தேதி சேகா் வெளியூா் சென்றாா்.

இந்த நிலையில், விளத்தூரிலிருந்து வந்த சேகரின் பெற்றோா், சகோதரியின் குடும்பத்தினா் ஆகியோா் ஏகாம்பரவள்ளியைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பெருமாள் மகன் ஆறுமுகம், இவரது மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் நந்திசீலன், சாரதி ஆகியோா் மீது எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com