தலைமைக் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

கமுதி அருகே தலைமைக் காவலா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
kmu14moorthi_pc_(1)_1411chn_73_2
kmu14moorthi_pc_(1)_1411chn_73_2
Updated on
1 min read

கமுதி: கமுதி அருகே தலைமைக் காவலா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள காத்தாகுளம்

கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் மூா்த்தி (42). இவா் பேரையூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இவா், பேரையூா் காவலா் குடியிருப்பில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, இறந்த மூா்த்தியின் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com