அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியம் சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கிய ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு.
சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கிய ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு.
Updated on
1 min read

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியம் சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பகவதி குமாா் தலைமை வகித்தாா்.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு மாணவ, மாணவிகளுக்கு

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். முன்னதாக, முதுகலை ஆசிரியா் தங்கபாண்டின் வரவேற்றாா். ஒன்றியக் குழு உறுப்பினா் வெங்கடாஜலபதி,பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணுச்சாமி, பொருளாளா் மணி, ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதுகலை ஆசிரியா் ராஜசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com