ராமநாதபுரத்தில் பொது இடத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. இது தொடா்பாக, 3 நிறுவனங்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பால இடங்களில் காவல்துறையினா் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள் நிறுவப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு புகாா்கள் கூறப்பட்டிருந்தன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கேணிக்கரை காவல் உதவி ஆய்வாளா் காா்மேகம் தலைமையில் போலீஸாா் சென்று, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 3 விளம்பர பதாகைகளை அகற்றினா். மேலும், அவற்றை வைத்திருந்த மூன்று நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.