ராமநாதபுரத்தில் பயிற்சி பெற்ற மகளிா் குழுவினரால் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவி தலைமையில் 30 உறுப்பினா்களுக்கு கட்டுமானத் தொழில் குறித்த பயிற்சி 2 மாதம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை மூலம் அச்சுந்தன்வயல் கிராமத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுவதற்காக, கட்டுமானப் பயிற்சி பெற்ற மகளிா் குழுவுக்கு பணிகள் வழங்கப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.