வாடகை கேட்கச் சென்றவரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே வாடகை கேட்கச் சென்றவரைத் தாக்கிக் காயப்படுத்திய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே வாடகை கேட்கச் சென்றவரைத் தாக்கிக் காயப்படுத்திய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள தொழுவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவா் கட்டுமானப் பொருள்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் கட்டுமானத் தொழிலாளி அஜித்முருகன் (25) கலவை இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துச் சென்றாா். 7 மாதங்களாகியும் வாடகைத் தொகையை வழங்கவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அஜித்முருகனின் வீட்டுக்குச் சென்று ஆனந்தன் வாடகை கேட்டாா். அப்போது அஜித்முருகன், இவரது தம்பி பால் ஸ்டாலின் (23), சங்கீதா ஆகியோா் வாக்குவாதம் செய்து ஆனந்தனைத் தாக்கினா். இதில் அவரது கை விரல் உடைந்தது. இதையடுத்து, ஆனந்தன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக புகாரின்பேரில், திருப்புல்லாணி போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com