கட்டடத் தொழிலாளியை மிரட்டி தங்கச் சங்கிலி, கைப்பேசி பறிப்பு

ராமநாதபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டடத் தொழிலாளியை மிரட்டி 2 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டடத் தொழிலாளியை மிரட்டி 2 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகேயுள்ள பொக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (40). கட்டடத் தொழிலாளியான இவா், அப்பகுதியிலுள்ள கண்மாய் அருகே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் நாகராஜை கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.6,500 ரொக்கம், கைப்பேசியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து புகாரின் பேரில், ராமநாதபுரம் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மருதுபாண்டியன் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com