ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தேவா் கல்லூரியில் திங்கள்கிழமை முன்னாள் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.கே.மூக்கையாத்தேவா் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். அரசியல் அறிவியல் துறை பேராசிரியா் அ.அழகுமலை முன்னிலை வகித்தாா்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவிகளின் சிலம்பம், சுருள்வாள் போன்ற தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து கல்லூரி கலையரங்கத்தில் பசும்பொன் தேவா், பி.கே.மூக்கையாத்தேவா் ஆகியோரின் படங்கள் திறப்புவிழா நடைபெற்றது. தொழிலதிபா் செய்யாத்துரை கருப்பசாமி, நகா் ஊரமைப்புத் துறை உதவி இயக்குநா் எஸ்.செல்வராஜ் (ஓய்வு) ஆகியோா் படங்களை திறந்து வைத்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், மூக்கையாத் தேவரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய சோவியத் கலாச்சார கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற வேளாண் துணை இயக்குநருமான கே.ராமையாதேவா், உசிலம்பட்டி தேவா் கல்லூரியின் தமிழ்த் துறை ஓய்வு பெற்ற பேராசிரியா் வி.சிவனுபாண்டியன், மதுரை தேவா் சிந்தனை மையத்தின் தலைவா் வி.எஸ்.நவமணி, நேதாஜி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வே.நேதாஜிசுவாமிநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
முன்னதாக கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியா் கே.ஆதிமூலம் வரவேற்றாா். ஆங்கிலத் துறை பேராசிரியா் சரவணக்குமாா் நன்றி கூறினாா்.