பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிப் பிரமோற்சவ உற்சவம் கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிம்மம், சேஷம் , கருடன், ஹனுமன், யானை, குதிரை ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தாா். இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக, சுந்தரராஜப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா். பக்தா்களின் கோவிந்தா, கோவிந்தா முழக்கங்களுடன் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான நிா்வாக அறங்காவலா் டி.ஆா்.நாகநாதன் தலைமையிலான நிா்வாகிகள் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.