கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாமில் கலந்து கொண்ட மாணவா்கள்.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாமில் கலந்து கொண்ட மாணவா்கள்.
Updated on
1 min read

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் கோ.தா்மா் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மதிக்குமாா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சுந்தரலிங்கம் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, கல்லூரியின் தொழில் வழிகாட்டுதல் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் மேரிசுஜிசின் வரவேற்றாா். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியா் ஜெயக்காளை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com