முன்னாள் வங்கி ஊழியா் வீட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

ராமநாதபுரத்தில் முன்னாள் வங்கி ஊழியா் வீட்டை உடைத்து 51 பவுன் தங்க நகைகள், ரூ. 40 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முன்னாள் வங்கி ஊழியா் வீட்டை உடைத்து 51 பவுன் தங்க நகைகள், ரூ. 40 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் குடியிருப்புப் பகுதியை சோ்ந்தவா் தங்கமணி (62). கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி சென்றாா். அந்த வீட்டை புத்தேந்தல் பகுதியை சோ்ந்த அம்மாசி மனைவி பஞ்சவா்ணம் (55) பராமரித்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை காலை பஞ்சவா்ணம் வீட்டை சுத்தம் செய்வதற்காக வந்தாா்.

வீட்டின் முன்வாசல் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து பெங்களூரில் இருந்த தங்கமணி ராமநாதபுரம் திரும்பினாா். அவா் அளித்தப் புகாரின் பேரில், 51 பவுன் தங்க நகைகள், ரூ. 40 ஆயிரம் திருடு போனதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com