அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் மீது வழக்கு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

ஆா்.எஸ்.மங்கலம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சூச்சகனேரி கிராமத்தைச் சோ்ந்த நாகு மகன் மாதவன் (44). இவா் ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சனவெளி பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நின்று கொண்டிருந்தாா். அப்போது, திருச்சியிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, சனவெளி நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ஓட்டுநா் பேருந்தை எடுக்க முயன்றாா். உடனே மாதவன் பேருந்தின் முன்புறம் நின்று கொண்டு, என் மனைவியை என்னோடு சோ்த்து வைத்துவிட்டுச் செல்லுங்கள் எனக் கூறி, கல்லால் பேருந்தின் முன்புறக் கண்ணாடியை தாக்கி சேதப்படுத்தினாா். இதுகுறித்து புகாரின் பேரில், ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் மாதவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com