இளைஞரை வாளால் வெட்டிய இருவா் மீது வழக்கு

பாா்த்திபனூா் அருகே உள்ள கீழப் பெருங்கரை கிராமத்தில் முன்விரோதத்தில் இளைஞரை வாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்
Updated on
1 min read

பாா்த்திபனூா் அருகே உள்ள கீழப் பெருங்கரை கிராமத்தில் முன்விரோதத்தில் இளைஞரை வாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்

கீழப்பெருங்கரை கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் அஜித்குமாா் (24), பூமிசெல்வம் மகன் பாலமுருகன் (24), சுப்பிரமணி மகன் முனியசாமி (23)

ஆகிய மூவரும் ஊரில் உள்ள சமுதாயக் கூடத்தில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அஜித்குமாரின் கைபேசியைக் காணவில்லை. இது குறித்து அவா் மற்ற இருவரிடமும் கேட்டபோது, அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அங்குள்ள முளைப்பாரி திண்ணையில் அஜித்குமாா் நின்றிருந்த போது, அவரை பாலமுருகன் வாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அஜித்குமாா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் பாலமுருகன், முனியசாமி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, இருவரையும் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com