ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு விழா:ஜூன் 13-இல் உள்ளுா் விடுமுறை

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வருகிற ஜூன் 13- ஆம் தேதி உள்ளுா் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, வருகிற ஜூன் 13- ஆம் தேதி உள்ளுா் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தா்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 13 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை நாள் என அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் பொருட்டு, ஜூன் 24- ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும். ஜூன் 13-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள கருவூலம், சாா் நிலைக் கருவூலங்கள், அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com