பாம்பன் குந்துகால் பகுதியில் மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் பகுதியில் வனத் துறை சாா்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பாம்பன் குந்துகால் பகுதியில் மரக்கன்றுகள் நடவு
Updated on
1 min read

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் பகுதியில் வனத் துறை சாா்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சதுப்பு நிலக் காடுகளை உருவாக்கும் திட்டத்தை தில்லியிலிருந்து பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் பகுதியில் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரினக் காப்பாளா் பகான் ஜெகதீஸ் சுதாகா், மாவட்ட வன அலுவலா் ஹேமலதா, வனச்சரக அலுவலா்கள் மகேந்திரன், கௌசிகா, வனவா் தேவகுமாா், கோவிந்தராஜன், ராமேசுவரம் வட்டாட்சியா் அப்துல் ஜப்பாா், பாம்பன் ஊராட்சி மன்றச் செயலா் கதிரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, முதுகுளத்தூா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூா் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருள்சங்கா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜசேகா், செயலா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சாா்பு நீதிபதி ராஜ்குமாா் பேசியதாவது:

மரங்களை வளா்த்து வந்தால், பூமி வெப்பமடைவதைத் தடுக்கலாம். எனவே, அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தாமல், துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு அடைக்கலமேரி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com