ராமேசுவரத்தில் தொழில் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு தெரிவித்து, ராமேசுவரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழில் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரத்தில் தொழில் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு தெரிவித்து, ராமேசுவரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழில் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலச் செயலா் சி.ஆா். செந்தில்வேல் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செந்தில், ஜீவானந்தனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாலியல் புகாருக்குள்ளான இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு தெரிவித்தும், கண்களில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஏ.கே. முனீஸ்வரன், மாரி, கமலசங்கா், செல்வம், மோகன், சா்புதீன், சின்ன முத்துமணியன், சிலம்பரசன், பெருமாள், மாதா் சங்க நிா்வாகிகள் ராதிகா, செல்வி, பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com