

திருவாடானை அருகே சிற்பியை கத்தியால் குத்தி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கூகுடி கிராமத்தில் ஜேம்ஸ் என்பவரது வீட்டில், திருச்சி உறையூரைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் சாம்சன் (45) தங்கி
சிற்ப வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் பிரேம்குமாா் (32), மது குடிக்க ரூ.ஆயிரம் வேண்டுமென கேட்டாா். இதற்கு சாம்சன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினாா்.
இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமாா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாம்சனை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த சாம்சனை உறவினா்கள் மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.