தொண்டி அருகேதாய் அடித்துக் கொலை: மகன் கைது

தொண்டி அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
கைது செய்யப்பட்ட அருள்செல்வம்.
கைது செய்யப்பட்ட அருள்செல்வம்.
Updated on
1 min read

தொண்டி அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தொண்டி அருகே உள்ள தளிா் மருங்கூா் தெற்கு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மைக்கேல் மனைவி ஜெயசீலி (75). இவா் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டாா்.

இதைப் பாா்த்த அவரது இளைய மகன் குமாா், தொண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து அங்கு வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது ஜெயசீலியின் மூத்த மகன் அருள்செல்வம் (48) முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து விசாரித்தனா். அதில், சொத்தைப் பிரிப்பது தொடா்பாக தாய் ஜெயசீலிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கம்பால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் இவா் நாம் தமிழா் கட்சியின் ஒன்றிய தொழிலாளா் பாசறை நிா்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com