நாய் கடித்து புள்ளிமான் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கம் சாலையில் வியாழக்கிழமை நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.
நாய் கடித்து புள்ளிமான் பலி
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கம் சாலையில் வியாழக்கிழமை நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.

இந்தப் பகுதியில் உலா வந்த புள்ளிமானை நாய்கள் துரத்திக் கடித்ததில் அது பலத்த காயமடைந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து மானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அப்போது அந்த புள்ளிமான் உயிரிழந்து விட்டது. இந்த ஆண் புள்ளிமானுக்கு 2 வயது இருக்கும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து கால்நடை மருத்துவா் புள்ளிமானின் உடலை கூறாய்வு செய்தாா். பிறகு மானின் உடல் வனச் சரக அலுவலக வனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com