பாக் நீரிணையில் பாதுகாப்பு ஒத்திகை

பாக் நீரிணையில் வியாழக்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
பாக் நீரிணையில் அதிவேகப் படகில் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் வியாழக்கிழமை ஈடுபட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸாா்.
பாக் நீரிணையில் அதிவேகப் படகில் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் வியாழக்கிழமை ஈடுபட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸாா்.
Updated on
1 min read

பாக் நீரிணையில் வியாழக்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கடல் வழியாக அந்நியா்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் சாகா் ஹவாஜ் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழகக் கடலோரப் பகுதி வழியாக ஊடுருவலைக் கண்காணித்துத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படையினா், தமிழகக் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், மத்திய மாநில உளவுத் துறையினா் மாவட்ட காவல் துறையினா் கூட்டாக ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னா் வளைகுடா, பாக் நீரிணைப் பகுதியில் இவா்கள் அதிவேகப் படகுகளில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com