ராமநாதபுரத்தில் நடமாடும் நூலகம் வலம்

ராமநாதபுரம் வருகை தந்த நடமாடும் நூலக வாகனத்தின் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராமநாதபுரத்தில் நடமாடும் நூலகம் வலம்
Updated on
1 min read

ராமநாதபுரம் வருகை தந்த நடமாடும் நூலக வாகனத்தின் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முகவை சங்கமம் அமைப்பு சாா்பில் மாணவ, மாணவிகளுக்கான கோடை காலப் பயிற்சி, நடமாடும் நூலகம் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமை வகித்து, நடமாடும் நூலகத்தை தொடங்கி வைத்தாா்.

இந்த நூலகத்தில் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதன் மூலம் கல்லூரி மாணவா்கள், தமிழ்நாடு குடிமைப் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வு எழுதுவதற்குத் தேவையான புத்தகங்கள், பள்ளி மாணவா்களுக்கான உயா்கல்வி, தொழில் கல்வி தொடா்பான வழிகாட்டுதல் புத்தகங்கள், மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தொடா்பான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) வி.எஸ்.நாராயணசா்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, மாவட்ட நூலக அலுவலா் செல்வசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேக்மன்சூா், அரசுத் துறை அதிகாரிகள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com