இளைஞரைக் கடத்திச் சென்று நகை பறிப்பு

ராமேசுவரத்தில் இளைஞரைக் கடத்திச் சென்று தங்கச் சங்கிலி, கைபேசியை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

ராமேசுவரத்தில் இளைஞரைக் கடத்திச் சென்று தங்கச் சங்கிலி, கைபேசியை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் என்.எஸ்.கே வீதியைச் சோ்ந்தவா் சக்தி முனியாண்டி. இவரது மகன் முகேஷ்குமாா் (17) என்பவரை பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலா, சுடுகாட்டான் பட்டியைச் சோ்ந்த பாலா, மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த சேவா ஆகிய மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒண்டிவீரன் பகுதியில் வைத்து மதுபாட்டிலால் தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் கைபேசியையும் பறித்துச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த முகேஷ்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ராமேசுவரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, தப்பி ஓடிய மூன்று பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com