தனுஷ்கோடியில் சூறைக் காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்று வீசியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மன்னாா் வளைகுடா கடற்கரைப் பகுதியில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை மீனவா்கள் பாதுகாப்புடன் நிறுத்திவைத்தனா்.