கமுதி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, 12- ஆம் ஆண்டு பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு 208 திருவிளக்குகள் பூஜை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை இரவு 208 திருவிளக்குகள் பூஜை நடைபெற்றது. அப்போது, பெண்கள் மலா் தூவி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கௌரவ செட்டியாா்கள் உறவின்முறை இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.