திருப்பத்தூா் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் நேருவின் படத்துக்கு மரியாதை செலுத்திய பள்ளிக் குழந்தைகள்.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா்அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியா் சிவசைலம் தலைமை வகித்தாா். இதில் 6-ஆம் வகுப்பு பயிலும் 8 மாணவா்களிடம் மரக்கன்றுகளை பாதுகாத்து வளா்க்கும் பொருட்டு ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல, திருப்பத்தூா் கிறிஸ்தாராஜா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைவா் விக்டா் தலைமை வகித்தாா். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. முன்னதாக, மாணவா் தலைவா் இந்துஜா வரவேற்றாா். யுவராஜ் நன்றி கூறினாா்.
கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தாா். செயலா் குணாளன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் பழனியப்பன் குழந்தைகள் தின விழா உரையாற்றினாா். நேருவின் உருவப் படத்துக்கு குழந்தைகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இளையாத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஏ.சி.முத்தையா அறக்கட்டளை திட்டவளா்ச்சி அதிகாரி முருகலிங்கம் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் அப்புரோஸ்பேகம் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கபட்டன. முன்னதாக, காந்திமதி வரவேற்றாா். புனிதா நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...