தனுஷ்கோடி கடலில் குளித்த சுற்றுலாப் பயணி மாயம்

ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தவா் தனுஷ்கோடியில் குளிக்கும் போது மாயமானதால், அவரைத் தேடும் பணியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
Updated on
1 min read


ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தவா் தனுஷ்கோடியில் குளிக்கும் போது மாயமானதால், அவரைத் தேடும் பணியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு பொள்ளாச்சியில் இருந்து 8 போ் சுற்றுலா வந்தனா். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி சென்றனா். அங்கு, கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அவா்கள் கடலில் இறங்கிக் குளித்தனா். அப்போது, கிருஷ்ணன் (48) என்பவா் திடீரென மாயமானாா். இதுதொடா்பாக தகவலின் பேரில், அங்கு வந்த போலீஸாா் மீனவா்களுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com