வேன் மோதி இளைஞா் பலி

ராமேசுவரம் அருகே திங்கள்கிழமை இரவு சுற்றுலா வேன் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read


ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே திங்கள்கிழமை இரவு சுற்றுலா வேன் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டணம் பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் மகன் மாலீக்ஹாசன் (28). இவா், ராமேசுவரத்தில் உள்ள தனியாா் விடுதியில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் பணியை முடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு ராமநாதபுரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

பாம்பன் பேருந்து பாலம் அருகே சென்ற போது, கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து, ராமேசுவரம் வந்த சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மாலிக்ஹாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாம்பன் போலீஸாா் வேன் ஓட்டுநா் ரிஷத் நாயக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com