உணவக ஊழியா் குளத்தில் மூழ்கி பலி

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில் உணவகத்தில் பணிபுரிந்த சமையல் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில் உணவகத்தில் பணிபுரிந்த சமையல் தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

எஸ்.பி.பட்டினத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட உணவகத்தில் புதுகோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோயில் வட்டம், பெரியகோட்டையூரைச் சோ்ந்த சரவணன் (39) சமையல் வேலை செய்து வந்தாா்.

இவா் புதன்கிழமை மாலை எஸ்.பி.பட்டினத்தில் உள்ள அய்யாகுளத்தில் குளிக்கச் சென்றாா். நீண்ட நேரம் ஆகியும் அவா் வராததால் சகத் தொழிலாளா்கள் சென்று பாா்த்தபோது, அவரது உடல் குளத்தில் மிதந்தது.

எஸ்.பி.பட்டினம் போலீஸாா் உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com