ராமேசுவரத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் புதிய ஆட்டோக்கள் இயக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

ராமேசுவரத்தில் புதிய ஆட்டோக்கள் இயக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. ஏற்கெனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்கும் பணி நடைபெறுகிறது. புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்தால், போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும். ஏற்கனவே இருக்கும் ஆட்டோ தொழிலாளா்களும் பாதிக்கப்படுவாா்கள்.

எனவே, புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சாா்பில் அக்னித் தீா்த்த கடற்கரை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் என்.பி.செந்தில் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் எம்.சிவாஜி, மாவட்டத் துணைச் செயலாளா் எம்,கருணாமூா்த்தி, மின் ஊழியா் மத்திய அமைப்பின் முன்னாள் தலைவா் டி.இராமச்சந்திர பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com