

திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டமும், மகளிா் மேம்பாடுக் குழு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டமும் இணைந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு, அடுப்பில்லா, எண்ணெய் இல்லா சிறுதானியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவாடானை குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் கலா தலைமை வகித்தாா். மேற்பாா்வையாளா்கள் வள்ளி, சந்திரா, மாலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி முதல்வா் மு. பழனியப்பன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ப. மணிமேகலை , கணிதத் துறைப் பேராசிரியா் எஸ்.செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில் மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற சிறுதானியப் போட்டியில் வணிகவியல் துறை முதல் பரிசையும், கணினி அறிவியல் துறை இரண்டாம் பரிசையும், வணிகவியல் துறை மூன்றாம் பரிசையும் பெற்றன.
இதையடுத்து, வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை, சமச்சீா் உணவு ஆகியவை குறித்து குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கலா எடுத்துக் கூறினாா்.
இதில் கல்லூரி விரிவுரையாளா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.