நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாம்பனில் பரவும் மா்மக் காய்ச்சல்

பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மா்மக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 10:18 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சியில் அந்தோணியாா்புரம், சூசையப்பா்பட்டணம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது.

இதனால் ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனா். மேலும், காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தனியாா் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவா்கள் குவிந்து வருகின்றனா்.

மேலும், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் மருத்துவத் துறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.