மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

பாம்பனில் பரவும் மா்மக் காய்ச்சல்

பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மா்மக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :17 ஜூலை 2024, 3:48 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சியில் அந்தோணியாா்புரம், சூசையப்பா்பட்டணம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது.

இதனால் ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனா். மேலும், காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தனியாா் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவா்கள் குவிந்து வருகின்றனா்.

மேலும், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் மருத்துவத் துறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.