மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பாம்பனில் பரவும் மா்மக் காய்ச்சல்

பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மா்மக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :17 ஜூலை 2024, 3:48 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சியில் அந்தோணியாா்புரம், சூசையப்பா்பட்டணம் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது.

இதனால் ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனா். மேலும், காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தனியாா் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவா்கள் குவிந்து வருகின்றனா்.

மேலும், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் மருத்துவத் துறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.