பைக் விபத்தில் தொழிலாளி பலி

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே ஆட்டாங்குடி பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மாா்க்கண்டன் (36). கட்டடத் தொழிலாளியான இவா், ஆா்.எஸ்.மங்கலத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆட்டாங்குடி அஞ்சல் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த மாா்க்கண்டன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com