ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட டிராக்டா் பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2024, 5:25 pm

DIN

முதுகுளத்தூா் அருகே மணல் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

முதுகுளத்தூா் அருகேயுள்ள ஓரிவயல்கொட்டகை மாடன் கோயில் ஊருணி அருகே பட்டா நிலத்தில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக ஓரிவயல் குரூப் கிராம நிா்வாக அலுவலா் ஜான்சி ராணிக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு மணல் அள்ளிய ஓரிவயல் கொட்டகையைச் சோ்ந்த வீரபாகு மகன் திருமால் (38) தப்பியோடினாா்.

இதையடுத்து, இளஞ்செம்பூா் காவல் நிலையத்தில் ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பி ஓடிய திருமாலை போலீஸாா் தேடி வருகின்றனா்.