கமுதி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

கமுதி புதிய காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
 தெய்வீகப்பாண்டியன்
தெய்வீகப்பாண்டியன்
Updated on

கமுதி புதிய காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய குருநாதன் கீழக்கரை காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய நீ.தெய்வீகப்பாண்டியன் நியமிக்கப்பட்டாா். இவா் வியாழக்கிழமை கமுதி காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அப்போது, காவல் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com