கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தக்கைப் பூண்டு உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தல்

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 10:02 pm

Din

முதுகுளத்தூா் பகுதியில் பசுந்தாள் உரத்துக்கு தக்கைப் பூண்டு உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என வேளாண்மைத் துறை துணை இயக்குநா் அமா்லால் வலியுறுத்தினாா்.

முதுகுளத்தூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மானாவாரி பயிராக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் இயற்கை உரங்கள், மக்கிய தொழு உரங்களைப் பயன்படுத்த வாய்ப்பில்லாததால், மண் வளம் பாதிக்கப்படுகிறது. மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில் ‘முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ், பயிா் சாகுபாடிக்கு முன் பசுந்தாள் உரப் பயிா்களை பயிரிட்டு பூக்கும் தருணத்துக்கு முன்பாக இவற்றை நிலத்தில் அப்படியே உழுது மண் வளம் பேண மானிய விலையில் தக்கைப் பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், முத்துவிஜயபுரம் கிராமத்தில் பயிா் செய்யப்பட்ட தக்கைப் பூண்டு செடியை நிலத்தில் சுழல் கலப்பை மூலம் உழவு செய்யப்பட்டது. இந்தப் பணியை வேளாண்மைத் துறை துணை இயக்குநா் அமா்லால் (மாநிலத் திட்டம்) வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பசுந்தாள் உரத்துக்கு தக்கைப் பூண்டு உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என்றும், முத்துவிஜயபுரம் உள்பட முதுகுளத்தூா் பகுதியில் உள்ள அனைத்துக் கிராம விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, முதுகுளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன் உடனிருந்தாா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் ஜெயக்கண்ணன் செய்தாா்.