அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘எழுத்தாளுமை விருது’

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘எழுத்தாளுமை விருது’

Published on

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ‘எழுத்தளுமை விருது’ வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அறிஞா் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சாா்பில், மகாகவி பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடலாடியை அடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் கிறிஸ்து ஞான வள்ளுவனுக்கு ‘எழுத்தாளுமை விருதை’ அறக்கட்டளைத் தலைவா் திருமலை முத்துச்சாமி, கோவில்பட்டி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் ரா.பாஸ்கரன் ஆகியாா் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com