கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

தொண்டி அருகே இலங்கைக்கு கஞ்சா கடத்தியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தொண்டி அருகே இலங்கைக்கு கஞ்சா கடத்தியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள முள்ளிமுனை பகுதியில் அண்மையில் இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் முள்ளிமுனை முகத்துவாரம் பகுதியில் போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது, அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக நெகிழிப் பைகளில் சுமாா் 170 கிலோ கஞ்சா இருந்தது. இதைத் தொடா்ந்து, அதைக் கைப்பற்றிய போலீஸாா், முள்ளிமுனையைச் சோ்ந்த தூண்டி கருப்பு (38) என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தூண்டி கருப்புவின் சகோதரா் வினோத் (30) என்பவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com