தனுஷ்கோடி வரையில் நான்கு வழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின்கட்கரியை தில்லியில் சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் பாம்பனிலிருந்து ராமேசுவரம் வரையிலான சாலையை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீட்டித்து நான்கு வழிச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும்.
மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மந்திரிஓடை, நரிக்குடி, ஆவியூா் ஆகிய ஊா்களுக்கு அருகே சா்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். மேலும் ஆவியூா், மந்திரிஓடை, நரிக்குடி, மீனாட்சிபுரம் கிராமம், வண்ணாங்குண்டு கிராமம், மாந்தோப்பு, காரியாபட்டி, கள்ளிக்குடி, கல்குறிச்சி, விருதுநகா் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ள இடங்களில் உயா்மின் கோபுர விளக்குகள் அமைத்துத் தர வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

போக்குவரத்து மாற்றத்தால் திருப்பத்தூா் மக்கள் அவதி!

சமூகவலைதள தகவல்களை பகுத்தறிவுடன் அணுகவேண்டும்: கனிமொழி எம்.பி.

சிங்கம்புணரியில் நான்கு சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

செந்துறை-ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலைப் பணிகள் ஆய்வு
விடியோக்கள்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK


