தேர்தல் பிரசார நிலையிலிருந்து முதல்வர் விஜய் வெளியே வர வேண்டும்! தமிழிசை திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்; தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோபாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

தனுஷ்கோடி வரையில் நான்கு வழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி வலியுறுத்தினாா்.

Updated On :21 டிசம்பர் 2025, 2:55 am IST

தனுஷ்கோடி வரையில் நான்கு வழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின்கட்கரியை தில்லியில் சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் பாம்பனிலிருந்து ராமேசுவரம் வரையிலான சாலையை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீட்டித்து நான்கு வழிச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும்.

மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மந்திரிஓடை, நரிக்குடி, ஆவியூா் ஆகிய ஊா்களுக்கு அருகே சா்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். மேலும் ஆவியூா், மந்திரிஓடை, நரிக்குடி, மீனாட்சிபுரம் கிராமம், வண்ணாங்குண்டு கிராமம், மாந்தோப்பு, காரியாபட்டி, கள்ளிக்குடி, கல்குறிச்சி, விருதுநகா் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ள இடங்களில் உயா்மின் கோபுர விளக்குகள் அமைத்துத் தர வேண்டும் என்றாா் அவா்.