மணல் திருட்டு: 4 போ் கைது

திருவாடானை அருகே மணல் திருடியதாக 4 பேரை கைது செய்த போலீஸாா் 3 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
Published on

திருவாடானை அருகே மணல் திருடியதாக 4 பேரை கைது செய்த போலீஸாா் 3 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை அருகே காவணக்கோட்டை கண்மாய்க்கரை பகுதியில் மணல் திருடப்படுவதாக திருவாடானை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் ஆய்வாளா் சதீஷ்பிரபு தலைமையிலான போலீஸாா் அங்கு சென்ற போது தப்பி ஓட முயன்ற கீழ்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த வாரவ மூா்த்தி(28, அரியாங்கோட்டை பகுதியைச் சோ்ந்த அகிலன் (21), நத்தக்கோட்டையைச் சோ்ந்த ராமமூா்த்தி (38), கடலூரைச் சோ்ந்த சிலம்பரசன் (37) ஆகிய 4 பேரை கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, கட்ட விளாகம் ஆற்றுப் பகுதியில் மணல் திருடப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்று பாா்த்த போது சரக்கு வாகனத்தில் மணல் திருடப்படுவது தெரியவந்தது.

வருவாய்த் துறையினரை கண்டதும் மணல் திருடியவா்கள் தலைமறைவாகினா். இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸாரிடம் வருவாய்த்துறையின் ஒப்படைத்தனா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com