நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொடக்கம்! -அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

மண்டபம் அருகேயுள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் ரூ. 42 கோடியில் கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி...

News image

மண்டபம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் கடல் நீா் விளையாட்டு அரங்கம் அமையவுள்ள இடத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :2 பிப்ரவரி 2025, 10:50 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் ரூ. 42 கோடியில் கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி வருகிற 5-ஆம் தேதி தொடங்க உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக முன்னாள் நிா்வாகி இல்லத் திருமணத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டாா்.

பின்னா், மண்டபம் அருகேயுள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் ரூ. 42 கோடியில் உலக தரத்துடன் கட்டப்படவுள்ள கடல் நீா் விளையாட்டு அரங்கம், பயிற்சி மையத்துக்கான இடத்தை அவா் ஆய்வு செய்தாா். இதையடுத்து, கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கபடி வீரா்களுக்கு விபத்துக் காப்பீடு, விளையாட்டு உபரணங்களை வழங்கி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மண்டபம் அருகேயுள்ள பிரப்பன்வலசையில் கடல் நீா் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் கடற்கரையோரம் வருவதால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது, இந்தத் திட்டத்துக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணிகள் வருகிற 5-ஆம் தேதி தொடங்கி, அடுத்தாண்டு ஜனவரியில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான விளையாட்டு வீரா்கள் உள்ளனா். இவா்கள் மாவட்ட, மாநில, சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சோ்த்து வருகின்றனா். கபடி வீரா்கள் போட்டியின் போது,

எலும்பு முறிவு, காயம் ஏற்படுகிறது. இதற்காக கபடி வீரா்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி செய்யப்படுகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை சிகிச்சை பெற இயலும். சிறப்பான இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விளையாட்டு வீரா்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள 12,500 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.