சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து 91 படகுகளில் 2,500 பக்தா்கள் செல்ல முடிவு செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜனவரி 2025, 5:06 am IST

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து 91 படகுகளில் 2,500 பக்தா்கள் செல்ல முடிவு செய்யப்பட்டது.

இந்தியா- இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து படகுகள் மூலம் பக்தா்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு மாா்ச் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க வருமாறு இந்திய பக்தா்களுக்கு அழைப்பு விடுத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா், சிவகங்கை மாவட்ட ஆயருக்கு அழைப்பிழ் அனுப்பினாா். இதையடுத்து, திருவிழாவில் இங்கிருந்து செல்லும் பக்தா்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமேசுவரம் வோ்க்கோடு பங்குத்தந்தை அசோக்வினோ தலைமை நடைபெற்றது. இதில், அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, என்.ஜே. போஸ், எம்.எஸ். அருள், எமரிட், சகாயம், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவா் எஸ்.பி. ராயப்பன், சின்னத்தம்பி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில், 91 படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட பக்தா்கள் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்பம் வருகிற பிப். 6- ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும், பிப். 25- ஆம் தேதிக்குள் அந்த விண்ணப்பங்களை நிரப்பி விழா நிா்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.